Saturday, June 4, 2011

பட்டுக் குதிரை

உன் வீட்டு தெருவில் விளையாடும்
குழந்தைகளை விசாரித்தேன்,
அவர்கள் யாரைத் தாண்டும் போதும்
பச்சைக் குதிரை விளையாடுகிறார்களாம்
உன்னைத் தாண்டும் போது மட்டும்
பட்டுக் குதிரையாம்.....

Thursday, June 2, 2011

என் உலகம்.....




எனக்கென்று
ஒரு உலகத்தை படைத்த இறைவன்
என்னை அதனை
சுற்றவைத்தான்
......

Wednesday, June 1, 2011

ஞானம்


நானே கடவுள்
என்ற ஞானம் பெற்றபின்பும்
உன்னையே தொழுகிறது
என்
மனசு !