Thursday, July 7, 2011

சுகமாய் ஒரு வரி.....


எங்கோ ஒரு சந்தையில்.
இந்த வரியை
தோளில் மூட்டையுடன் வைக்க இடம் இன்றி
யாரோ ஒரு தகப்பன்
தன் நெஞ்சில் சுமந்துகொண்டு
அவன் மகனை நினைத்த படியே.....

எங்கோ ஒரு வீட்டில்.
இந்த வரி,
பத்துப்பாத்திரம் தேய்க்கும்போது தேய்துவிடாமல்
யாரோ ஒரு தாய்
தன் முந்தானையில் முடிந்துகொண்டு
அவள் பிள்ளையை நினைத்த படியே.....

எங்கோ ஒரு தீப்பெட்டித் தொழில்ச்சாலையில்.
இந்த வரி,
விரல்களோடு சேர்ந்து தீய்ந்துவிடாமல்
யாரோ
ஒரு தங்கை
தன் உள்ளங்கையில் பொத்திவைத்துக்கொண்டு
அவள் அண்ணனை நினைத்த
படியே.....

எங்கோ ஒரு வரவேற்பு அறையில்.
இந்த வரி,
கணவாய் மட்டும் இருக்கும் தன் திருமணத்துடன் சேர்ந்து கலைந்துவிடாமல்
யாரோ ஒரு அக்கா

தன் நினைவில் தாங்கிக்கொண்டு
தன் தம்பியை நினைத்த படியே.....
.
.
.
.
.
.
அவ ஒரு ஆலாலைட்டான்னா போதும் ..........

Saturday, June 4, 2011

பட்டுக் குதிரை

உன் வீட்டு தெருவில் விளையாடும்
குழந்தைகளை விசாரித்தேன்,
அவர்கள் யாரைத் தாண்டும் போதும்
பச்சைக் குதிரை விளையாடுகிறார்களாம்
உன்னைத் தாண்டும் போது மட்டும்
பட்டுக் குதிரையாம்.....

Thursday, June 2, 2011

என் உலகம்.....




எனக்கென்று
ஒரு உலகத்தை படைத்த இறைவன்
என்னை அதனை
சுற்றவைத்தான்
......

Wednesday, June 1, 2011

ஞானம்


நானே கடவுள்
என்ற ஞானம் பெற்றபின்பும்
உன்னையே தொழுகிறது
என்
மனசு !

Monday, May 30, 2011

இறகாய் ஒரு நேசம்.....


இறந்த பறவையாய் என் காதல்
அதன் நினைவுகள் மட்டும்
உதிர்த்த இறகாய்
என்றும் புதிதாய்
மனம் என்னும் என் புத்தகத்தில்......